மாநில மொழியை கட்டாய பாடமாக்க அரசுக்கு அதிகாரம்: உச்ச நீதிமன்றம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சிறுபான்மை கல்வி நிலையங்களில் மாநில மொழியைக் கட்டாய பாடமாக அறிவிக்க அதிகாரம் அரசுக்கு உண்டுஎன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

மகாராஷ்டிரா மாநில அரசு தனது மாநிலத்தில் உள்ள சிறுபான்மை பள்ளிகள் உட்பட அனைத்துபள்ளிக்கூடங்களிலும் மராத்தி மொழியைக் கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து குஜராத்தி பள்ளிக்கூட நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதுசிறுபான்மை மக்களின் உரிமையில் தலையிடுவது ஆகும் என்று வாதிட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ராஜேந்திர பாபு, நீதிபதி லட்சுமணன், நீதிபதி மாத்தூர் ஆகியோர்அடங்கிய பெஞ்ச் மகாராஷ்டிரா அரசின் உத்தரவுக்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில்,

சிறுபான்மை பள்ளிகளில் மாநில மொழியை கட்டாய பாடமாக அறிவிக்கும் உரிமை மாநில அரசுக்கு உண்டு. இதுசிறுபான்மை இனத்தவரின் அதிகாரத்தில் தலையிடுவதாகாது.

மாநிலத்தின் நலனை கருத்தில் கொண்டு மராட்டிய அரசு எடுத்த கொள்கை முடிவைத் தவறு என்று சொல்லமுடியாது. ஒரு மாநிலத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் அந்த மாநிலத்தின் மொழியை படிக்க முடியாது என்றுசொல்வது சரியல்ல. அப்படி சொல்வது தேச ஒற்றுமைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

பல மொழிகளை படிப்பதால் கலாசார இணைப்பு ஏற்பட்டு நாட்டின் ஒருமைப்பாடு வலுவடையும். எனவேமகாராஷ்டிரா அரசின் உத்தரவு அங்கு வாழும் குஜராத்தி சமூகத்தினரின் உரிமையை பாதிக்கும் என்பதை ஏற்கமுடியாது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+