எருமைகள் மீது மோதிய எக்ஸ்பிரஸ் ரயில்; என்ஜின் சேதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் எருமை மாடுகள் மீது மோதியது. இதில் என்ஜின்சேதமடைந்தது. இதனால் தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வரும் ரயில்கள் போக்குவரத்தில் பாதிப்புஏற்பட்டது.
சென்னையையடுத்து மேல் மருவத்தூர் அருகே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தபோது, ரயில் பாதையைகடக்க முயன்ற 4 எருமை மாடுகள் மீது மோதியது. இதில் 2 எருமை மாடுகள் பலியாயின. இந்த விபத்தில் ரயில்என்ஜின் சேதமடைந்தது.
இதனால் ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்த பயணிகள் இறக்கி விடப்பட்டு அனந்தபுரி எக்ஸ்பிரஸ்ரயில் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 3 மணி நேர தாமதத்திற்குப் பின்னர் அனந்தபுரி எக்ஸ்பிரஸ்ரயில் சென்னை வந்து சேர்ந்தது.
இந்த விபத்தால், தென் மாவட்டங்களிலிருந்து சென்னை வந்த ரயில்கள் அனைத்தும் மிகவும் தாமதமாகவேசென்னை வந்து சேர்ந்தன.












Click it and Unblock the Notifications