ரூ.800 கோடியில் சேது சமுத்திரத் திட்டம்: டி.ஆர்.பாலு
சென்னை:
ரூ.800 கோடி செலவில் சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என்றுமத்திய கப்பல் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் டி.ஆர். பாலுதெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றும் அமைப்பாக தூத்துக்குடி துறைமுக பொறுப்புக் கழகம்நியமிக்கப்பட்டுள்ளது. வரும் 15ம் தேதி தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் ஒப்புதல் பெறவிண்ணப்பிக்கப்படும். மத்தியச் சுற்றுச் சூழல் அமைச்சகத்திடம் ஒப்புதல் பெறுவதற்கும் நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும்.
ஒப்புதல்கள் கிடைத்தவுடன், நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கும். இத் திட்டத்திற்கு தமிழக அரசுஇடையூறு செய்யும் என்று நான் கருதவில்லை.
சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் மேற்கத்திய நாடுகளில் இருந்து சென்னை துறைமுகத்துக்குவருவதற்கான தூரம் 350 கடல்மைல்கள் குறையும்.
கப்பலின் கீழ்த் தளத்துக்கும், கடலின் தரைக்கும் இடையே 7 மீட்டர் இடைவெளி இருக்கும் வகையில்ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படும். இதற்கு ரூ.800 கோடி செலவாகும்.
முதலில் இந்தத் திட்டத்திற்கான நிதி ஆதாரத்தைக் கண்டறிய வேண்டியுள்ளது. இப்போதைக்கு ஒரு கப்பல் செல்லும்வகையில் பாதை அமைக்கப்படும் என்றார் டி.ஆர். பாலு.