குற்றாலத்தில் கூடுகிறது சிபிஎம் நிர்வாக குழு
Subscribe to Oneindia Tamil
திருநெல்வேலி:
நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் வருகிற 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநில நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறவுள்ளது.
சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகியதொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதைக் கொண்டாடும் வகையிலும், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் மாநில நிர்வாகக் குழுக் கூட்டத்தை குற்றாலத்தில் கூட்டியுள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
மேலும், 7ம் தேதியன்று மாநிலம் முழுவதிலும் பொதுக் கூட்டங்கள் நடத்தவும் அக்கட்சி ஏற்பாடு செய்துள்ளது.












Click it and Unblock the Notifications