ஊழல் வழக்கு: ஹட்கோ முன்னாள் சேர்மனுக்கு ஜாமீன்
சென்னை:
ரூ.15 கோடி ஊழல் வழக்கில் கைதான ஹட்கோ நிறுவனத்தின் முன்னாள் சேர்மன் அருண்குமார் ஜாமீனில்விடுதலை செய்யப்பட்டார்.
லஞ்சம் வாங்கிக் கொண்டு, கோயம்பேட்டில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதற்கு அரிஹந்த் என்ற ரியல்எஸ்டேட் நிறுவனத்துக்கு முறைகேடாக கடன் உதவியளித்தாகவும், கடனைத் திரும்பிப் பெற முயற்சிமேற்கொள்ளவில்லை என்றும் அருண்குமார் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.
இதில் அரசு பணம் ரூ.14.68 லட்சம் மோசடி செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அருண்குமாரைசி.பி.ஐ. போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதனையடுத்து தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் அருண்குமார் மனு தாக்கல்செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பின்னர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது.
இந் நிலையில், கைது செய்த 60 நாளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவேண்டும். ஆனால் சி.பி.ஐ. போலீசார் 60நாள் தாண்டிய பிறகும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை. எனவே தன்னை ஜாமீனில் விடுதலைசெய்ய வேண்டும் என்று சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அருண்குமார் மீண்டும் மனுத் தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமசாமி ரூ.2 லட்சத்துக்கு சொந்த ஜாமீனிலும், அதே தொகைக்கு இரு நபர் ஜாமீனிலும்விடுதலை செய்ய உத்தர விட்டார்.












Click it and Unblock the Notifications