பாஜக தலைவர்கள் பேச்சு குறித்து கருத்து கூற விரும்பவில்லை: ஜெ.
சென்னை:
தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி உறவு தொடர்பாக பாஜக தலைவர்கள் கருத்து விரும்பவில்லை என்றுமுதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
கடந்த 30ம் தேதி பாஜகவின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட அக்கட்சியின் அகில இந்தியத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, அதிமுக-பாஜக கூட்டணி தேர்தலுக்காக உருவானது. இப்போது தேர்தல்முடிந்துவிட்டதால் கூட்டணி தொடர்வதாகக் கருதவில்லை என்று தெரிவித்தார்.
அதே கருத்தை கட்சியின் தேசிய செயலாளர் இல.கணேசனும் தெரிவித்திருந்தார்.
இந் நிலையில், பாஜக தலைவர்களின் கருத்துக்கு பதில் கூற விரும்பவில்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார். இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
தேர்தல் முடிவுகள் வெளியானதும், முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி தொலைபேசியில் தொடர்பு கொண்டுஎன்னிடம் பேசினார்.
நேற்று முன்தினம் வெங்கைய்யா நாயுடு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நான் நிருபர்களிடம் கூறியதுதவறாகப் பத்திரிக்கைகளில் வெளியிடப்பட்டதாகவும், அதிமுகவுடனான தோழமையைத் தொடர பாஜகவிரும்புவதாகவும் தெரிவித்தார்.
எனவே இந்தப் பிரச்சனை தொடர்பாக எந்தக் கருத்தையும் கூற நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications