மக்களவை கூடியது
டெல்லி:
14வது மக்களவைக் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது.
இன்று காலை மார்க்சிஸ்ட் உறுப்பினர் சோம்நாத் சாட்டர்ஜியை இடைக்கால சபாநாயகராக குடியரசுத் தலைவர்அப்துல் கலாம் நியமித்தார். இதன் மூலம் புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, சோம்நாத் சாட்டர்ஜிமக்களவையை வழிநடத்திச் செல்ல முடியும்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், நாடாளுமன்றவிவகாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. புதிய உறுப்பினர்களுக்கு சோம்நாத் சாட்டர்ஜி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். முதலில் ராணுவ அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், பின்னர் முன்னாள் பிரதமர் வாஜ்பாயும்பதவியேற்றனர். இவர்களையடுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மற்றும் பல உறுப்பினர்களும்பதவியேற்றனர்.
எம்.பிக்களின் பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளையும் நடைபெறும். இதனையடுத்து நாளை மறுநாள் சபாநாயகர் தேர்தல்நடைபெறுகிறது. வரும் 7ம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அப்துல் கலாம்உரையாற்றுகிறார்.
மக்களவை சபாநாயகராக சோம்நாத் சாட்டர்ஜியை ஒரு மனதாகத் தேர்ந்தெடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணிமுடிவு செய்துள்ளது. அதற்காக மக்களவைத் துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்குத் தர தயார் என்றுபிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
ஆனால் சோம்நாத் சாட்டர்ஜியை எதிர்த்து பி.ஏ.சங்மாவை சபாநாயகராக நிறுத்த தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த மக்களவைத் தொடரில் கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்களுக்கு அமைச்சரவையில் இடம்கொடுத்தது தொடர்பாக பிரச்சனையைக் கிளப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
பாஜக கட்சியின் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுத் தலைவராக முன்னாள் பிரதமர் வாஜ்பாயும், மக்களவைஎதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் துணைப் பிரதமர் எல்.கே.அத்வானியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications