வைகோ அமெரிக்கா செல்ல உயர்நீதிமன்றம் அனுமதி
சென்னை:
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அமெரிக்கா செல்ல சென்னை உயர்நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.
11 மாதமாகும் தனது பேத்தியை, சிகாகோவில் உள்ள மகளிடம் கொண்டு சேர்ப்பதற்காக அமெ-ரிக்கா செல்லநீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் என்றும் இதற்காக புதிய பாஸ்போர்ட்டை வழங்க பாஸ்போர்ட் அதிகா-ரிகளுக்குஉத்தரவிட வேண்டும் என்றும் கோ-ரி வைகோ உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை விசா-ரித்த உயர்நீதிமன்றம் கடந்த 18ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்தது. அந்த உத்தரவில்,பூந்தமல்லி பொடா நீதிமன்றத்தின் வசம் உள்ள காலாவதியாகி விட்ட சிறப்பு பாஸ்போர்ட்டை வைகோவிடம்ஒப்படைக்க வேண்டும்.
வைகோ அந்த பாஸ்போர்ட்டை பாஸ்போர்ட் அதிகாரிகளிடம் வழங்க வேண்டும். பாஸ்போர்ட் அதிகாரிகள்வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட் வழங்கி, அதை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்என்று உத்தரவிட்டது.
அதன்படி பாஸ்போர்ட் அதிகா-ரிகள் வைகோவுக்கு புதிய சாதாரண பாஸ்போர்ட்டை வி-நியோகித்து அதைபூந்தமல்லி நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். இந் -நிலையில் ஏற்கனவே காலாவதியாகி விட்ட சிறப்ப பாஸ்போர்ட்டின்-மூலம் 2009ம் ஆண்டு வரைக்கும் விசா பெற்றிருந்தார் வைகோ. அந்த விசா தற்போது பாஸ்போர்ட்அதிகா-ரிகளிடம் உள்ளது.
எனவே, அந்த விசாவை தன்னிடம் வழங்குமாறும், புதிய பாஸ்போர்ட்டை தன்னிடம் பூந்தமல்லி நீதிமன்றம்ஒப்படைக்கமாறும், தன்னை அமெரிக்கா செல்ல அனுமதிக்குமாறும் கோரி கடந்த வாரம் புதிதாக ஒரு மனுவைஉயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் வைகோ.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி மிஸ்ரா மற்றும் நீதிபதி குலசேகரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வைகோஅமெரிக்கா செல்ல அனுமதியளித்தது. வைகோவின் பாஸ்போர்ட்டை அவரிடம் ஒப்படைக்குமாறு பூந்தமல்லிபொடா சிறப்பு நீதிமன்றத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும் 3 வார காலத்திற்கு வைகோ அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்யலாம் என்றும் ஜூன் 20ம் தேதிக்குள்அவர்சென்னை திரும்பி விட வேண்டும் என்றும் அவர்கள் தீர்ப்பில் கூறியுள்ளனர்.
இதயைடுத்து வைகோ நாளை அமெரிக்கா செல்வார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.