For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை வந்தது வீராணம் நீர்; 2 நாட்களில் விநியோகம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புது வீராணம் திட்டத்தின் மூலம் சென்னைக்குக் கொண்டுவரப்பட்டுள்ள குடிநீர் விநியோகம் இன்னும் 2 நாட்களில்தொடங்கும் என்று கூறப்படுகிறது.

கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து சென்னைக்குக் குடிநீர் கொண்டு வருவதற்காக ரூ.700 கோடியில் புதுவீராணம் திட்டத்தை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தற்போது வீராணம் ஏரியில் போதிய தண்ணீர் இல்லாதகாரணத்தால் நெய்வேலி, வடலூர் ஆகிய பகுதிகளில் போர் போட்டு தண்ணீர் எடுக்கப்பட்டு குழாய்கள் மூலம்குடிநீர் சென்னைக்குக் கொண்டு வரப்படுகிறது.

சுமார் 208 கிலோமீட்டர் தொலைவிலிருந்து ராட்சச குழாய்கள் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீர் தற்போதுசென்னை போரூர் ஏரியில் தேக்கி வைக்கப்பட்டு வருகிறது. தண்ணீர் வரத்து சீராகவும், வழியில் கசிவு ஏதும்இல்லாமல் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

போரூர் வந்துள்ள வீராணம் நீர் சுத்திகரிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 2 நாட்களில் இந்த குடிநீர் சென்னை நகரமக்களுக்கு விநியோகிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X