அரசு டாக்டர்கள் பற்றாக்குறை சரி செய்யப்படும்: அன்புமணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அரசு மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறை சரி செய்யப்படும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி கூறியுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி சென்னை கே.கே.நகரில் உள்ள அரசு முதியோர், ஓய்வூதியர்களுக்கான சிறப்பு மருத்துவமனையை இன்று சுற்றிப் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,இந்த மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை, மருத்துவர்கள் இல்லை என்று கூறப்பட்டது. இந் நிலை நாடு முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் உள்ளது.
இவை இரண்டையும் தவிர மருத்துவமனைகளின் சுகாதாரத்தையும் பேணிக் காக்க வேண்டியுள்ளது. இவற்றை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கிராமப் புறங்களில் அரசு மருத்துவர்கள் கட்டாயமாக்குவது குறித்து பரிசீலித்து வருகிறோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications