தீப்பொறி ஆறுமுகத்துக்கு 1 ஆண்டு சிறை தண்டனை

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரையைச் சேர்ந்த முன்னாள் திமுக மேடைப் பேச்சாளர் தீப்பொறி ஆறுமுகத்திற்கு மதுரை நீதிமன்றத்தில் 1ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

மதுரையைச் சேர்ந்தவர் தீப்பொறி ஆறுமுகம். திமுகவில் பல காலம் மேடைப் பேச்சாளராக இருந்து தமிழகமெங்கும்தனது "அனல்" பறக்கும் பேச்சால் பிரபலமடைந்தவர். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் திமுகவிலிருந்து விலகிஅதிமுகவில் இணைந்தார்.

கடந்த 1991ம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி திடீர் நகர் பகுதியில் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில் தீப்பொறிஆறுமுகம், ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இதுதொடர்பாக அதிமுகவினர்கொடுத்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீஸார் புகார் பதிவு செய்து மதுரை 5வது குற்றவியல் நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி, 2 பிரிவுகளின் கீழ் தலா ஒரு ஆண்டு கடுங்காவல் தண்டனைவிதித்தார். இரு தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

இதனையடுத்து மேல் முறையீடு செய்யப்போவதாகக் கூறி தீப்பொறி ஆறுமுகம் ஜாமீன் பெற்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+