காவிரி பிரச்சினை: கூட்டணி தலைவர்களுடன் கருணாநிதி 5ம் தேதி ஆலோசனைசென்னை:காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி வரும் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் நினைவு அரங்கத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.இந்தக் கூட்டத்தில் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.இதேபோல, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி பாசனப் பகுதி விவசாயிகள் பிரச்சினை தொடர்பாக ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் திமுக தலைவர் கருணாநிதி வரும் 5ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 5ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம், முரசொலி மாறன் நினைவு அரங்கத்தில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் காவிரி பாசனப்பகுதி விவசாயிகளின் பிரச்சினை குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படவுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இதேபோல, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 7ம் தேதி காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications