சுப. இளவரசனின் தம்பி கைது
Subscribe to Oneindia Tamil
பெரம்பலூர்:
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப.இளவரசனின் தம்பி சுப. செல்வம் திடீர் என்று கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப.இளவரசன் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இந் நிலையில், அவரது தம்பிசுப. செல்வம் பெரம்பலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையம் மீது வெடிகுண்டு வீசியதாக தொடரப்பட்ட வழக்கில் செல்வம் மீது வழக்கு நடந்து வருகிறது.இதுதொடர்பான விசாரணையில் அவர் ஆஜராகாததால் அவரைக் கைது செய்ய ஜெயங்கொண்டம் நீதிமன்றம்உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சுப. செல்வத்தை ஜெயங்கொண்டம் போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர்.












Click it and Unblock the Notifications