ஜெ.மீதான வழக்கை வாபஸ் பெறுகிறது சிபிசிஐடி
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீது தனி நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வரும் கிரானைட் ஊழல் வழக்கை முடித்துக்கொள்வதாக தனி நீதிபதிக்கு சிபிசிஐடி கடிதம் எழுதியுள்ளது.
கடந்த 1991ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரையிலான முந்தைய ஜெயலலிதா அரசில் நடந்த பல்வேறுமுறைகேடுகள், ஊழல்கள் குறித்து விசாரிக்க 1997ம் ஆண்டு தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
ஜெயலலிதா மீது தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்றுதான் ரூ. 75 கோடி கிரானைட் ஊழல் வழக்கு.விதிமுறைகளுக்கு மாறாக கிரானைட் குவாரிகளுக்கு குத்தகை வழங்கியதில் ரூ. 75 கோடி வரை அரசுக்கு இழப்புஏற்பட்டதாகக் கூறி தனி நீதிமன்றத்தில் திமுக அரசு சார்பில் சிபிசிஐடி வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில், ஜெயலலிதா தவிர முன்னாள் அமைச்சர் சின்னச்சாமி, டாமின் நிறுவன முன்னாள் நிர்வாகஇயக்குநர் தியானேஸ்வரன், முன்னாள் தொழில்துறை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது.
முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இருந்து வந்த இந்த வழக்கை தற்போது முடித்துக்கொள்வதாக சிபிசிஐடி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தனி நீதிபதி மதிவாணனுக்கு சிபிசிஐடி எழுதியுள்ளகடிதத்தில், இந்த வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை, முடித்துக் கொள்ள விரும்புகிறோம் என்றுகூறியுள்ளது.
ஜெயலலிதா மீது தற்போது நிலுவையில் உள்ள பிற வழக்குகள் விவரம்: மொத்தம் 46 வழக்குகள் ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்டோர் மீது திமுக அரசால் கடந்த 1997ம் ஆண்டு போடப்பட்டது.
லண்டன் ஹோட்டல் வழக்கு குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நிலுவையில் உள்ளது.அதேபோல, 3 லட்சம் அமெரிக்க டாலர் பணம் ஜெயலலிதா கணக்கில் உள்ளது தொடர்பான வழக்கு முதல் தகவல்அறிக்கை நிலையில் உள்ளது.
இதுதவிர மீனா விளம்பர நிறுவன வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதா முதன்மைக்குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு தற்போது கர்நாடகநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications