பண்ணையாரிடம் பறிமுதல் செய்த நகையை பெற ராதிகா செல்வி நீதிமன்றத்தில் மனு தாக்கல்சென்னை: தமது கணவர் வெங்கடேச பண்ணையாரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்த நகைகள் மற்றும் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கோரி திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். கடந்த வருடம் வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரிடமிருந்து 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. அவரது மனைவி ராதிகா செல்வி அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவைக் கூட்டத் தொடரில் ராதிகா செல்வி டெல்லி சென்றுள்ளார். இந் நிலையில், பண்ணையாரிடம் கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணத்தைத் திருப்பத் தரக் கோரி ராதிகா செல்வி சார்பில் எழும்பூர் 14-வது பெருநகர நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் இது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
சென்னை:
தமது கணவர் வெங்கடேச பண்ணையாரிடம் இருந்து போலீஸார் பறிமுதல் செய்த நகைகள் மற்றும் பணத்தை திரும்பப் பெற்றுத் தருமாறு கோரி திருச்செந்தூர் தொகுதி திமுக எம்.பி. ராதிகா செல்வி நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த வருடம் வெங்கடேச பண்ணையார் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது அவரிடமிருந்து 60 பவுன் நகைகள், ரூ.1 லட்சம், 4 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவரது மனைவி ராதிகா செல்வி அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மக்களவைக் கூட்டத் தொடரில் ராதிகா செல்வி டெல்லி சென்றுள்ளார்.
இந் நிலையில், பண்ணையாரிடம் கைப்பற்றப்பட்ட நகை மற்றும் பணத்தைத் திருப்பத் தரக் கோரி ராதிகா செல்வி சார்பில் எழும்பூர் 14-வது பெருநகர நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி கோவிந்தராஜ் இது குறித்து பதிலளிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications