ராஜீவ் கொலை வழக்கில் உதவ ஐரோப்பா நிபந்தனை
டெல்லி:
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்குத் தொடர்பான சாட்சியங்கள் கிடைத்தால் அவற்றை ஒப்படைக்கசில ஐரோப்பிய நாடுகள் நிபந்தனை விதித்துள்ளன.
ராஜீவ் கொலைக்கு முன்பும் அதன் பின்பும் விடுதலைப் புலிகள் அமைப்புக்குப் பணம் சென்ற வழிமுறைகள் குறித்துபல்நோக்கு கண்காணிப்பு ஏஜென்சி தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
குறிப்பாக சாமியார் சந்திராசாமி மற்றும் புலிகளுக்கு நிதியைத் திரட்டித் தரும் பத்மனாபன் ஆகியோர் மூலம் 50வங்கிகள் வழியாக விடுதலைப் புலிகளுக்கு பணப்பட்டுவாடா நடந்திருப்பதாக சிபிஐ கண்டறிந்துள்ளது.
இது தொடர்பான விவரத்தை அறிந்து கொள்ள உதவுமாறு 23 நாடுகளுக்கு ஏஜென்சி கடிதம் எழுதியது. ஆனால்தங்களுக்குக் கிடைக்கும் தகவல்களை அனுப்ப தயாராக இருக்கும் இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகள் ஒருநிபந்தனையை விதித்துள்ளன.
தாங்கள் தரும் ஆதாரங்கள் மூலமாக கைது செய்யப்படும குற்றவாளிகள் யாருக்கும் மரண தண்டனை அளிக்கக்கூடாது என்ற நிபந்தனைதான் அது. இது குறித்து மத்திய அரசுடன் விரைவில் விவாதிக்க உள்ளதாக பல்நோக்குகண்காணிப்பு ஏஜென்சி கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications