காவலருக்கு எதிரான வழக்கு: இன்பத்தமிழன் வாக்குமூலம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசியதாக போலீஸ்காரர் மீது தொடரப்பட்ட வழக்கில் இளைஞர்நலத்துறை அமைச்சர் இன்பத்தமிழன் நீதிமன்றத்தில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கடந்த 2002ம் ஆண்டு, அக்டோபர் 9ம் தேதி காவிரிப் பிரச்சினை தொடர்பாக அரசு பந்த் நடத்தியது. பந்த்தினத்தன்று காவலர் ஜெயராஜ் என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் இருந்த இடத்தில் அவர் பணியில் இருந்தார். அப்போதுஅந்தப் பகுதிக்குவந்த அமைச்சர் இன்பத் தமிழன், ஜெயராஜ் குடிபோதையில் ஜெயலலிதா குறித்து அவதூறாகப் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதுகுறித்து போலீஸில் புகார் கொடுத்தார்.
அவரது புகாரின் பேரில், போலீஸார் ஸ்ரீவில்லிபுத்தூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜெயராஜ் மீது வழக்குத்தொடர்ந்தனர். இந்த வழக்கில் இன்பத்தமிழன் வாக்குமூலம் அளித்தார்.












Click it and Unblock the Notifications