For Daily Alerts
Just In
நாகப்பட்டினத்தில் 15 இலங்கை மீனவர்கள் சிறைபிடிப்பு
நாகப்பட்டினம்:
சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி நாகை கடல் பகுதியில் மீன் பிடித்த 15 இலங்கை மீனவர்களை கடலோர காவல் படையினர் பிடித்தனர்.
வழக்கமான ரோந்துப் பணியில் மண்டபத்தைச் சேர்ந்த கடலோரக் காவல் படையினர் ஈடுபட்டிருந்தபோது, நாகப்பட்டனம் கடல் பகுதியில் 15 இலங்கை மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை கடலோரக் காவல் படையினர் வளைத்துப் பிடித்தனர்.
பின்னர் அவர்களை மண்டபம் கடலோரக் காவல் படை முகாமுக்குக் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் போலீஸார் வசம் ஒப்படைக்கப்படுவார்கள் எனத் தெரிகிறது.
Comments
admk vijay chennai astrology surya Ajith Pooja madhavan tamilnadu simran kiran electricity kural jeevajothi art gallery florals jothika amoga
Story first published: Friday, June 4, 2004, 5:30 [IST]