படுகொலைகளை தவிர்க்க புலிகள், இலங்கை அரசு உறுதி
கொழும்பு:
கொலைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்று இலங்கை ராணுவமும், விடுதலைப் புலிகள் அமைப்பும் உறுதி எடுத்துக் கொண்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 15-ம் தேதியிலிருந்து கிழக்கு மாகாணத்தில் புலிகள், ராணுவத்தினர் உள்ளிட்ட 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந் நிலையில் கடந்த திங்கள்கிழமை தமிழ்ப் பத்திரிகையாளர் நடேசன் கொல்லப்பட்டார்.
இதனையடுத்து இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புடைய இலங்கை ராணுவமும், அவர்களுக்கு உதவிய தீவிரவாதிகளும் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று புலிகள் அமைப்பு எச்சரிக்கை விடுத்ததது. இதனால் பதற்றம் ஏற்பட்டது.
இந்தப் பதற்றத்தைத் தணிக்க நார்வே கண்காணிப்புக் குழு இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்தது. மட்டக்களப்பில் நடைபெற்ற கூட்டத்தில் புலிகள் மற்றும் இலங்கை ராணுவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
அப்போது கொலைச் செயல்களில் ஈடுபடுவதில்லை என்ற உறுதிமொழியை இரு தரப்பினரும் எடுத்துக் கொண்டனர்.












Click it and Unblock the Notifications