மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; ஓகனேக்கலில் வெள்ளம்சேலம்:மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளிடையே லேசான மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரி சுமார் 2,000 கன அடி நீர் வரை அதிகரித்தபடி உள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் வரை வந்து கொண்டிருந்தது. இது புதன்கிழமை 8,261 கன அடி நீராக இருந்தது.கர்நாடகத்தில் மழை பெய்வதாலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்வதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. மேலும், கபிணி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறிக் கொண்டிருப்பதும் நீர்வரத்து அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதற்கிடையே, கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதால் காவிரியின் தமிழக நுழைவாயிலான ஓகனேக்கலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் போல கொட்டுவதால் கவனமுடன் இருக்குமாறு காவல்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சேலம்:
மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் காவிரிப் பாசனப் பகுதி விவசாயிகளிடையே லேசான மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தினசரி சுமார் 2,000 கன அடி நீர் வரை அதிகரித்தபடி உள்ளது. நேற்று அணைக்கு விநாடிக்கு 10,000 கன அடி நீர் வரை வந்து கொண்டிருந்தது. இது புதன்கிழமை 8,261 கன அடி நீராக இருந்தது.
கர்நாடகத்தில் மழை பெய்வதாலும், மேட்டூர் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளிலும் மழை பெய்வதாலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்திருக்கிறது. மேலும், கபிணி நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேறிக் கொண்டிருப்பதும் நீர்வரத்து அதிகரித்திருப்பதற்கு ஒரு காரணம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே, கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து வருவதால் காவிரியின் தமிழக நுழைவாயிலான ஓகனேக்கலில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அங்குள்ள நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் பெருக்கெடுத்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகரித்துள்ளது.
அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வெள்ளம் போல கொட்டுவதால் கவனமுடன் இருக்குமாறு காவல்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.