மாநிலங்களவை தேர்தல்: உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மாநிலங்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு இடைக்கால தடை விதித்து உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

65 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் 21ம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் தமிழகத்தில் காலியாகும் 6 இடங்களும் அடங்கும். இன்று முதல் வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந் நிலையில் மாநிலங்களவைத் தேர்தல் நடவடிக்கைகளை நிறுத்தி வைக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாநிலங்களவைக்குப் போட்டியிடும் வேட்பாளர்கள் அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை என அண்மையில் ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இதை எதிர்த்து பிரபல பத்திரிக்கையாளர் குல்தீப் நாயார் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இதை விசாரித்த நீதிபதி ரூமா பால் மற்றும் நீதிபதி அகர்வால் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தேர்தல் நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்ததோடு இது தொடர்பாக விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+