ஜெயலலிதாவை விமர்சித்த காவலருக்கு கட்டாய ஓய்வு
விருதுநகர்:
முதல்வர் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியதாக கூறப்படும் தலைமைக் காவலருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக இருப்பவர் ஜெயராஜ். இவர் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நடந்த தமிழக அரசின் பந்த்தின்போது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேர் அருகே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தார்.
அப்போது சக காவலர்களிடம் ஜெயலலிதாவை விமர்சித்துப் பேசியுள்ளார். இதை அந்தப் பக்கம் வந்த அமைச்சர் (அப்போது வெறும் எம்.எல்.ஏ.) இன்பத் தமிழன் கேட்டு விட்டு போலீஸில் புகார் கொடுத்தார்.
அதன் பேரில் ஜெயராஜ் மீது போலீஸார் புகார் பதிவு செய்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் நேற்று முன்தினம்தான் அமைச்சர் இன்பத்தமிழன் சாட்சியம் அளித்தார். இந் நிலையில், தலைமைக் காவலர் ஜெயராஜூக்கு கட்டாய ஓய்வு கொடுத்து மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications