கருணாநிதி தேசிய அரசியலுக்கு வர வேண்டும்: வி.பி.சிங்சென்னை:திமுக தலைவர் கருணாநிதி தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தமிழகத்தை விட்டு வெளியே போக அவரை தமிழக மக்கள் விட மாட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறினார்.திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தீவுத் திடல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வி.பி.சிங் கலந்து கொண்டார்.அவர் பேசுகையில், இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். அவரது பங்கு இந்திய அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் அவர் மிக முக்கிய அங்கம் வகித்தார்.தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி புல்டோசர் போல புறப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்று பாஜக கூட்டணியை தரைமட்டமாக்கி விட்டது.நாட்டின் மூத்த தலைவரான கருணாநிதி தலைமையிலான கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் தொடர வேண்டும். கருணாநிதியின் ஆட்சி எப்போதுமே மிகச் சிறந்ததாக, வரலாறு படைத்ததாகவே இருக்கும் என்றார் அவர்.நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் பேசினார். அவரும் கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டினார்.இவர்கள் தவிர மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் நரேந்திரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வயலார் ரவி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

திமுக தலைவர் கருணாநிதி தேசிய அரசியலுக்கு வர வேண்டும் என்பதே எனது விருப்பம். ஆனால் தமிழகத்தை விட்டு வெளியே போக அவரை தமிழக மக்கள் விட மாட்டார்கள் என்று முன்னாள் பிரதமர் வி.பி.சிங் கூறினார்.

திமுக தலைவர் கருணாநிதியின் 81வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தீவுத் திடல் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் வி.பி.சிங் கலந்து கொண்டார்.

அவர் பேசுகையில், இந்தியாவின் மிக உயர்ந்த தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர். அவரது பங்கு இந்திய அரசியலில் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. சமீபத்திய அரசியல் நிகழ்வுகளில் அவர் மிக முக்கிய அங்கம் வகித்தார்.

தமிழகத்தில் திமுக தலைமையில் அமைந்த கூட்டணி புல்டோசர் போல புறப்பட்டு மாபெரும் வெற்றியைப் பெற்று பாஜக கூட்டணியை தரைமட்டமாக்கி விட்டது.

நாட்டின் மூத்த தலைவரான கருணாநிதி தலைமையிலான கூட்டணி சட்டசபைத் தேர்தலிலும் தொடர வேண்டும். கருணாநிதியின் ஆட்சி எப்போதுமே மிகச் சிறந்ததாக, வரலாறு படைத்ததாகவே இருக்கும் என்றார் அவர்.

நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலும் பேசினார். அவரும் கருணாநிதிக்குப் புகழாரம் சூட்டினார்.

இவர்கள் தவிர மத்திய ஊரக வளர்ச்சித்துறை இணை அமைச்சர் நரேந்திரா, அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் வயலார் ரவி, பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,

காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரதராஜன், நல்லகண்ணு, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொஹைதீன் உள்ளிட்டோரும் கருணாநிதியை வாழ்த்திப் பேசினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+