மதுரை ஆதீன மடத்துக்கு புதிய இளைய சன்னிதானம்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக சுவாமிநாதன் (16) என்ற பிளஸ் 1 மாணவர் பட்டமேற்றுள்ளார்.

மதுரை ஆதீனம் திருஞான சம்பந்தரால் 6ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மடமாகும். இதுவே இந்தியாவில் முதல் மடமாகும்.

இத்தகைய ஆன்மீக சிறப்பு மிக்க மதுரை ஆதினத்தின் இளைய சன்னிதானமாக சுவாமிநாதனுக்கு, 293-வது பீடாதிபதி குருமகராஜ் சிவாய் சச்சிதானந்த பரமாச்சார்ய திருஞானசம்பந்த தேசிகர் என்ற பெயரிட்டு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.

அவருக்கு மதுரை ஆதீனகர்த்தரான 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இளவரசு பட்டம் சூட்டினார்.

சுவாமிநாதன், திருநெல்வேலியைச் சேர்ந்த பொன். கோவிந்தசாமிப் பிள்ளை, சங்கரவடிவு ஆகியோரின் 2-வது மகன் ஆவார். இவர் பிளஸ் 1 படிப்பு முடித்திருக்கிறார்.

சுவாமிநாதன் இளைய சன்னிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் கூறியதாவது: மரபு அடிப்படையில் பழனியில் ஓலைச் சுவடி மூலம் சுவாமிநாதன் 293-வது குருமகா சன்னிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இனி சாதி, சமய நல்லிணக்கத்திற்காக அவர் பாடுபடுவார். அஞ்சல் வழிக் கல்வி மூலம் தொடர்ந்து படிப்பார் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+