மதுரை ஆதீன மடத்துக்கு புதிய இளைய சன்னிதானம்
மதுரை:
மதுரை ஆதீனத்தின் இளைய சன்னிதானமாக சுவாமிநாதன் (16) என்ற பிளஸ் 1 மாணவர் பட்டமேற்றுள்ளார்.
மதுரை ஆதீனம் திருஞான சம்பந்தரால் 6ம் நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்ட மடமாகும். இதுவே இந்தியாவில் முதல் மடமாகும்.
இத்தகைய ஆன்மீக சிறப்பு மிக்க மதுரை ஆதினத்தின் இளைய சன்னிதானமாக சுவாமிநாதனுக்கு, 293-வது பீடாதிபதி குருமகராஜ் சிவாய் சச்சிதானந்த பரமாச்சார்ய திருஞானசம்பந்த தேசிகர் என்ற பெயரிட்டு இளவரசுப் பட்டம் சூட்டப்பட்டது.
அவருக்கு மதுரை ஆதீனகர்த்தரான 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீல ஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், இளவரசு பட்டம் சூட்டினார்.
சுவாமிநாதன், திருநெல்வேலியைச் சேர்ந்த பொன். கோவிந்தசாமிப் பிள்ளை, சங்கரவடிவு ஆகியோரின் 2-வது மகன் ஆவார். இவர் பிளஸ் 1 படிப்பு முடித்திருக்கிறார்.
சுவாமிநாதன் இளைய சன்னிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை ஆதீனம் கூறியதாவது: மரபு அடிப்படையில் பழனியில் ஓலைச் சுவடி மூலம் சுவாமிநாதன் 293-வது குருமகா சன்னிதானமாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இனி சாதி, சமய நல்லிணக்கத்திற்காக அவர் பாடுபடுவார். அஞ்சல் வழிக் கல்வி மூலம் தொடர்ந்து படிப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications