கருணாநிதிக்கு எழும்பூர் நீதிமன்றம் சம்மன்சென்னை:சிறுபான்மையினர் நடத்திய கூட்டத்தில், இந்து என்றால் திருடன் என்று பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வருகிற 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.சென்னை வேப்பேரி ஆன்ட்ரூஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுபான்மையினர் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது தொடர்பாக சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் ஒரு மனுத் தாக்கல் செய்தார். அதில், இந்து என்றால் திருடன் என்று நல்லோர்கள் சொல்வார்கள் என கருணாநிதி பேசியது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் இது குறித்துபோலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி எழும்பூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.இந் நிலையில், வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ளும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.முத்து விழா வசூல் ரூ. 2 லட்சம் !திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 2.17 லட்சம் நிதி வசூலாகியுள்ளது.கருணாநிதி கடந்த 3ம் தேதி தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அவர் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது மேடையில் நிதி வசூல் உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சிறுபான்மையினர் நடத்திய கூட்டத்தில், இந்து என்றால் திருடன் என்று பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் வருகிற 15ம் தேதி எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகும்படி திமுக தலைவர் கருணாநிதி கருணாநிதிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரி ஆன்ட்ரூஸ் கிறிஸ்தவ ஆலயத்தில் கடந்த 2002ம் ஆண்டு ஜூன் மாதம் சிறுபான்மையினர் கூட்டம் நடந்தது. இதில் கருணாநிதி கலந்து கொண்டு பேசினார்.

அந்தக் கூட்டத்தில் கருணாநிதி பேசியது தொடர்பாக சென்னை எழும்பூர் 14வது நீதிமன்றத்தில் வழக்கறிஞர் கோபிநாத் ஒரு மனுத் தாக்கல் செய்தார்.

அதில், இந்து என்றால் திருடன் என்று நல்லோர்கள் சொல்வார்கள் என கருணாநிதி பேசியது மதக் கலவரத்தை தூண்டும் வகையில் உள்ளது என்றும் இது குறித்துபோலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

இது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி எழும்பூர் போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.

இந் நிலையில், வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி குற்றபத்திரிக்கை நகலை பெற்றுக் கொள்ளும்படி கருணாநிதிக்கு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.

முத்து விழா வசூல் ரூ. 2 லட்சம் !

திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி வைக்கப்பட்டிருந்த உண்டியலில் ரூ. 2.17 லட்சம் நிதி வசூலாகியுள்ளது.

கருணாநிதி கடந்த 3ம் தேதி தனது 81வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் அவர் தொண்டர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பெற்றார். அப்போது மேடையில் நிதி வசூல் உண்டியலும் வைக்கப்பட்டிருந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+