காவிரி: அதிமுகவுக்கு இல.கணேசன் பாராட்டு
சென்னை:
காவிரி விவகாரம் குறித்துப் பேச நாளை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கச் செல்லும் திமுக தலைமையிலான குழுவில் இடம் பெற அதிமுக முன் வந்திருப்பதை பா.ஜ.க. வரவேற்றுள்ளது.
இது குறித்து பா.ஜ.க. பொதுச் செயலாளர் இல.கணேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கூப்பிட்டாலும் அதிமுக வராது என்று நினைத்து திமுக தரப்பில் இருந்து அதிமுகவுக்கு துரைமுருகன் மூலமாக கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், இந்தக் குழுவில் இடம் பெறத் தயார் என்று அறிவித்ததன் மூலம் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்திவிட்டார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் இந்த எதிர்பாராத அறிவிப்பால் தமிழகம் மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. மாநில நலனுக்காக இப்படி அனைத்துக் கட்சிகளும் இணைந்து செயல்பட்டால் அது தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றிவிடும்.
காவிரி விவகாரத்தில் தமிழக கட்சிகளுக்கு பா.ஜ.கவும் துணை நிற்கும் என்று கூறியுள்ளார் கணேசன்.












Click it and Unblock the Notifications