அதிமுக தோல்விக்கு காரணம் என்ன?: சங்கராச்சாரியார் பதில்
மும்பை:
அதிமுகவின் தோல்விக்கு முதல்வர் ஜெயலலிதாவின் ஆணவமே காரணம் என்று காஞ்சி சங்கராச்சாரியார் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி படுதோல்வி அடைந்ததற்கு ஜெயலலிதாவின் ஆணவம்தான் காரணம். அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அவர் கையாண்ட விதம் சரியில்லை. வெறும் பழிவாங்கும் நடவடிக்கையாக அது தரம் தாழ்ந்து விட்டது.
இதனால் அரசு ஊழியர் குடும்பங்கள் அதிமுகவுக்கு எதிராகத் திரும்பி விட்டன. ஜெயலலிதா பிறப்பித்த சட்டங்களில் டெஸ்மா சட்டம் தவிர, மதமாற்றத் தடை சட்டம் உள்ளிட்ட சட்டங்கள் சரியாக அமலாக்கப்படவே இல்லை.
இப்போது எல்லா சட்டங்களையும் வாபஸ் பெற்றுள்ளார். தேர்தலுக்கு முன்பு இதைச் செய்திருந்தால் கொஞ்சம் பலன் இருந்திருக்கும். ஜெயலலிதாவுக்கு இவ்வாறெல்லாம் ஆலோசனை கூறுவது யார் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
அயோத்தி விஷயத்தில் நீதிமன்ற உத்தரவை ஏற்பதுதான் சரி என்று மத்திய உள்துறை அமைச்சசர் சிவராஜ் பாட்டீல் கூறுவது சரியல்ல. இது உணர்வுப்பூர்வமான விஷயம். இதிலெல்லாம் நீதிமன்றம் ஒருபோதும் முடிவு எடுக்காது என்றார் சங்கராச்சாரியார்.












Click it and Unblock the Notifications