பெரியாறு, ஆழியாறு அணைகளை திறக்க ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விவசாயப் பணிகளுக்காக பெரியாறு, ஆழியாறு, பாபநாசம் ஆகிய அணைகளைத் திறக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மூன்று அணைகளின் பாசனப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், விவசாயப் பணிகளுக்காக அணைகளைத் திறக்க வேண்டும் என்று கோரி வந்தனர். இதை ஏற்று 3 அணைகளையும் உடனடியாக திறக்குமாறு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பெரியாறு அணை திறக்கப்படுவதன் மூலம், தேனி, கம்பம் ஆகிய பெரியாறு-வைகை பாசனப் பகுதியில் சுமார் 14,707 ஏக்கர் நிலங்கள் பயனடையும்.
அதேபோல, ஆழியாறு பாசனப் பகுதியில் உள்ள 6,500 ஏக்கர் நிலங்கள் ஆழியாறு அணையைத் திறப்பதன் மூலம் பலனடையும்.
பாபநாசம் அணையைத் திறப்பதன் மூலம் 27,649 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும் என ஜெயலலிதாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications