திடீர்.. திடீர்: பழநி கோயில் பஞ்சலோக சிலை அகற்றம்பழநி:பழநி கோயிலில்மூலவரை மறைத்து, புதிதாக வைக்கப்பட்ட பஞ்சலோக சிலையை தமிழக அரசு திடீரென அகற்றியுள்ளது.பழநி கோயில் மூலவர் சன்னதியில் நவபாஷான சிலையின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி திடீரென புதிய முருகன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட இந்த சிலை மூலவரை மறைக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.இதனால், மூேலவரை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஜோதிடர் யாரோ சொன்னதைக் கேட்டு தமிழக அரசு இந்தச் செயலைச் செய்ததாக புகார் எழுந்தது.மூலவரை மறைக்கும் இந்தப் புதிய சிலையை அகற்றக் கோரி பல்வேறு மடங்களும், பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் போராட்டம் நடத்தின.ஆனால், அதற்கு அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந் நிலையில் இப்போது அந்தப் புதிய சிலை சிவாச்சார்யார்கள் முன்னிலையில் அதிகாரிகளால் திடீரென அகற்றப்பட்டுள்ளது.சமீபத்தில் அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி ஏற்பட்டதற்கும், இந்த சிலை அகற்றத்துக்கும் முடிச்சு போட்டு பழனி எங்கும் ஒரே பரபரப்பாக பேசப்படுகிறது.5 மாதங்களுக்கு முன் திடீரென சிலை வைக்கப்பட்டதற்கும், இப்போது திடீரென அகற்றப்பட்டதற்கும் தமிழக அரசிடம் இருந்து இதுவரை முறையான விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பழநி:
பழநி கோயிலில்மூலவரை மறைத்து, புதிதாக வைக்கப்பட்ட பஞ்சலோக சிலையை தமிழக அரசு திடீரென அகற்றியுள்ளது.
பழநி கோயில் மூலவர் சன்னதியில் நவபாஷான சிலையின் முன்பு கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி திடீரென புதிய முருகன் சிலை ஒன்று பிரதிஷ்டை செய்யப்பட்டது. பஞ்சலோகத்தினால் செய்யப்பட்ட இந்த சிலை மூலவரை மறைக்கும் அளவிற்கு அமைக்கப்பட்டிருந்தது.
இதனால், மூேலவரை தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. ஜோதிடர் யாரோ சொன்னதைக் கேட்டு தமிழக அரசு இந்தச் செயலைச் செய்ததாக புகார் எழுந்தது.
மூலவரை மறைக்கும் இந்தப் புதிய சிலையை அகற்றக் கோரி பல்வேறு மடங்களும், பல்வேறு அமைப்புகளும், பக்தர்களும் போராட்டம் நடத்தின.
ஆனால், அதற்கு அரசு அசைந்து கொடுக்கவில்லை. இந் நிலையில் இப்போது அந்தப் புதிய சிலை சிவாச்சார்யார்கள் முன்னிலையில் அதிகாரிகளால் திடீரென அகற்றப்பட்டுள்ளது.
சமீபத்தில் அதிமுகவுக்கு தேர்தல் தோல்வி ஏற்பட்டதற்கும், இந்த சிலை அகற்றத்துக்கும் முடிச்சு போட்டு பழனி எங்கும் ஒரே பரபரப்பாக பேசப்படுகிறது.
5 மாதங்களுக்கு முன் திடீரென சிலை வைக்கப்பட்டதற்கும், இப்போது திடீரென அகற்றப்பட்டதற்கும் தமிழக அரசிடம் இருந்து இதுவரை முறையான விளக்கம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தோற்ற விரக்தியில் ஸ்டாலின் அறிக்கையாக விட்டு தள்ளுகிறார்.. பழைய டெக்னிக் செட் ஆகாது.. விஜய் ஆவேசம் -
திமுக ஒரு தீய சக்தி.. அதிமுக தீர்ந்து போன சக்தி! நேரடியாக பாய்ந்த முதல்வர் விஜய் -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications