சொத்து குவிப்பு வழக்கில் வரும் 28ம் தேதி துரைமுருகன் ஆஜராக உத்தரவுவேலூர்: வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 28ம் தேதி ஆஜராக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனுக்கு வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், சகோதரர் துரைசிங்காரம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி ராஜகோபால் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் துரைமுருகன் உட்பட வழக்கில் சம்பந்தமுடைய அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வேலூர்:
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் வரும் 28ம் தேதி ஆஜராக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகனுக்கு வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த திமுக ஆட்சியின்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக துரைமுருகன் மற்றும் அவரது குடும்பத்தார் மீது அதிமுக அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை வேலூர் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
வழக்கு விசாரணைக்கு வந்தபோது துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த், சகோதரர் துரைசிங்காரம் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி ராஜகோபால் வழக்கு விசாரணையை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
மேலும் துரைமுருகன் உட்பட வழக்கில் சம்பந்தமுடைய அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகவும் உத்தரவிட்டார். அன்றைய தினம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications