பத்திரிக்கைகள் ஒத்துழைக்க கருணாநிதி வேண்டுகோள்சென்னை: காவிரிப் பிரச்சினை தீர பத்திரிக்கைகள் ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார். அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது ஒரு நிருபர், கர்நாடக முதல்வர் தரம்சிங்கைச் சந்திக்கும் குழுவில் அதிமுக இடம் பெறுமா எனக் கேட்டார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் மட்டுமே கர்நாடக முதல்வரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி பதிலளித்தார். அதிமுகவை அழைக்க மாட்டீர்களா என்று அந்த நிருபர் மீண்டும் கேட்கவே, அதற்குக் கருணாநிதி, தரம்சிங்கைச் சந்திக்க அதிமுகவுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்புச் செய்தி போடுவதற்காகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள். சில பத்திரிக்கைகள் நாட்டையே கெடுக்கின்றன. நான் அனைத்துப் பத்திரிகைகளையும் குறை சொல்லவில்லை. சில பத்திரிக்கைகள்தான் இவ்வாறு செய்கின்றன. காவிரிப் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை. இதைப் பத்திரிக்கைகள் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.
சென்னை:
காவிரிப் பிரச்சினை தீர பத்திரிக்கைகள் ஒத்துழைக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.
அண்ணா அறிவாலயத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களுக்கு கருணாநிதி பேட்டியளித்தார். அப்போது ஒரு நிருபர், கர்நாடக முதல்வர் தரம்சிங்கைச் சந்திக்கும் குழுவில் அதிமுக இடம் பெறுமா எனக் கேட்டார்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர்கள் மட்டுமே கர்நாடக முதல்வரை சந்திப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கருணாநிதி பதிலளித்தார். அதிமுகவை அழைக்க மாட்டீர்களா என்று அந்த நிருபர் மீண்டும் கேட்கவே, அதற்குக் கருணாநிதி,
தரம்சிங்கைச் சந்திக்க அதிமுகவுக்கு அழைப்பு இல்லை எனத் தலைப்புச் செய்தி போடுவதற்காகவே இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்.
சில பத்திரிக்கைகள் நாட்டையே கெடுக்கின்றன. நான் அனைத்துப் பத்திரிகைகளையும் குறை சொல்லவில்லை. சில பத்திரிக்கைகள்தான் இவ்வாறு செய்கின்றன.
காவிரிப் பிரச்சினை என்பது மக்கள் பிரச்சினை. இதைப் பத்திரிக்கைகள் கெடுத்துவிடாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications