அதிமுக எம்எல்ஏவின் கணவரிடம் இன்று பிரைன் மேப்பிங் சோதனை
பெங்களூர்:
மருமகன் கொலை வழக்குத் தொடர்பாக காங்கேயம் அதிமுக எம்.எல்.ஏ. செல்வி முருகேசனின் கணவர் முருகேசன் மற்றும் அதிமுக பிரமுகர் கராத்தே கோவிந்தராஜன் ஆகியோரிடம் பிரைன் மேப்பிங் எனப்படும் நவீன முறை மூலம் விசாரணை நடத்தப்படவுள்ளது.
இச் சோதனையின்போது மருந்துகள் செலுத்தப்பட்டு, மூளையில் பதிவாகியுள்ள தகவல்களை மருத்துவர்கள், கேள்விகளைக் கேட்டு வெளிக் கொணர்வார்கள்.
செல்வி முருகேசனின் மகள் கவிதா, சிவகுமார் என்பவரைக் காதல் திருமணம் செய்து கொண்டார். சிவகுமார் கடந்த ஏப்ரல் 10-ம் தேதி கொலை செய்யப்பட்டார்.
இந்தக் கொலை தொடர்பாக செல்வி முருகேசன், அவரது கணவர் முருகேசன் மற்றும் கராத்தே கோவிந்தராஜன் ஆகியோர் மீது பெங்களூர் கோரமங்களா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இம்மூவரிடமும் பிரெய்ன் மேப்பிங் எனப்படும் மூளை ரேகை பதிவுச் சோதனையை நடத்த போலீஸார் முடிவு செய்தனர். இந் நிலையில் செல்வி முருகேசனுக்கு விஷக் காய்ச்சல் இருப்பதாகவும் அதனால் அவர் மூளை ரேகைப் பதிவு சோதனையில் அவரது வழக்கறிஞர் போலீஸாரிடம் தெரிவித்தார்.
இதனையடுத்து முருகேசன், கராத்தே கோவிந்தராஜன் ஆகியோர் இருவருக்கும் நேற்று மூளை ரேகைப் பதிவு சோதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், பெங்களூர் தடய அறிவியில் சோதனைக்கூட இயக்குநர் டாக்டர் மாலினி, வேறொரு வழக்கு விசாரணையில் ஈடுபட்டிருந்ததால் இந்த சோதனை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications