பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். வகுப்புகளுக்கு தடை கோருகிறார் வீரமணிமதுரை: பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்துவதை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கோரியுள்ளார்.மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:தமிழகத்துக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இப்போது தமிழக எம்.பிக்கள் 12 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அவர்களும், மற்ற தமிழக மக்களவை உறுப்பினர்களும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் மத்திய அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து செயல்பட வேண்டும்.தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடப்பதைத் தடை செய்ய வேண்டும்.அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி இடஒதுக்கீடு முறையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.இதை வலியுறுத்தி அடுத்த மாதம் 5-ம் தேதி தமிழக அரசு அலுவலகங்கள் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார் வீரமணி.

Subscribe to Oneindia Tamil

மதுரை:

பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்துவதை உடனடியாக மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி கோரியுள்ளார்.

மதுரையில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழகத்துக்கான பல திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் நிலுவையில் உள்ளன. இப்போது தமிழக எம்.பிக்கள் 12 பேர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். அவர்களும், மற்ற தமிழக மக்களவை உறுப்பினர்களும் தமிழக நலனுக்காக இணைந்து செயல்பட வேண்டும். அதேபோல் மத்திய அரசுடன் தமிழக முதல்வர் ஜெயலலிதா இணைந்து செயல்பட வேண்டும்.

தமிழைச் செம்மொழியாக அறிவிக்க மத்திய அரசு உடனடியாக ஆணை பிறப்பிக்க வேண்டும். பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி நடப்பதைத் தடை செய்ய வேண்டும்.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. இதை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி ஒன்றைத் தொடங்கி இடஒதுக்கீடு முறையில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும்.

இதை வலியுறுத்தி அடுத்த மாதம் 5-ம் தேதி தமிழக அரசு அலுவலகங்கள் முன்பாக திராவிடர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று கூறினார் வீரமணி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+