மைசூர், மண்டியா விவசாயிகள் மிரட்டல்
மைசூர்:
தமிழகத்துக்கு காவிரித் தண்ணீரை திறந்துவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்று மைசூர் மற்-றும் மண்டியா மாவட்ட விவசாயிகள் அறிவித்துள்ளனர்.
இ-துதொ-டர்-பா-க கபினி விவசாயிகள் பாதுகாப்பு சமிதி தலைவர் கே. சாந்தகுமார் கூறியதாவது:
தமி-ழ-க கட்-சி-க-ளின் கோரிக்கையை ஏற்று கர்-நா-ட-க அரசு தண்ணீர் திறந்-து விடக் கூடாது. அவ்வாறு தண்ணீர் திறந்-து விட முடிவு செய்தால் மைசூர், மண்டியா -மா-வட்-ட விவசாயிகள் போராட்டம் நடத்துவார்கள்.
தி-மு-க கூட்-ட-ணிக் கட்--சித் த-ல-வர்-கள் கர்நாடக அரசுடன் வ-ரும் 10-ம் தேதி (நாளை) நடத்-த-வி-ருக்-கும் பேச்சுவார்த்தைக்-குப் பிறகு எந்-த -மா-தி-ரி-யான போராட்டம் -நடத்-து-வ-து என்ப-து முடிவு செய்-யப்-ப-டும்.
கர்நா-ட-க அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லை என்பதை ஏற்கெனவே மத்திய திட்டத் துறை இணை அமைச்சர் எம்.வி. ராஜசேகரனிடம் மனு மூலம் தெரி-வித்-துள்-ளோம். வறட்சி கார-ண-மா-க கடந்த 3 ஆண்டுகளில் ஏராளமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே காவி-ரி---யில் தண்ணீர் திறந்துவிடக்கூடாது.
கூட்டணிக் கட்சிகளின் நிர்பந்தத்துக்கு மன்மோகன்சிங் பணியக்கூடாது. கர்நாடகாவின் நிலையை மத்திய அரசு புரிந்துகொண்டு எங்-க-ள-து கோரிக்கையை ஏற்கவேண்டும்.
தமிழக விவசாயிகளுடன் கர்-நா-ட-க விவசாயிகள் எப்போதும் சுமூகமாக உள்ளனர். ஆனால் அதே நேரத்தில் கர்நாடக விவசாயிகளின் நலன் காக்கப்படவேண்டும்.
காவிரிப் பிரச்சினை குறித்து தமி-ழ-க விவ-சா-யி-க-ளு-டன் ஆலோசனை நடத்த ஜூன் 11ம் தேதி (நாளை ம-று-நாள்) கர்நாடக மாநில விவசாயிகள் சங்கக் குழு தமிழகத்துக்குச் செல்கிறது. திருச்சியில் இந்த சந்திப்பு நடைபெறும் என்றார் சாந்-தகு-மார்.