அரசு நிலத்தில் விஜயகாந்த்துக்கு சிலை: தாராபுரத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே அரசு நிலத்தில் நடிகர் விஜயகாந்த்துக்கு கோவில் கட்டியுள்ள அவரதுரசிகர்கள், அவரது சிலையையும் நிறுவியுள்ளனர்.

இந்த புறம்போக்கு நில ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதால் அங்கு பரபரப்புஏற்பட்டுள்ளது.

தாராபுரம் அருகே உள்ளது தாசர்பட்டி கிராமம். இங்குள்ள விஜயகாந்த் ரசிகர்கள், தமிழ்க் கடவுள் விஜயகாந்த்என்ற பெயரில் விஜயகாந்த்துக்கு கோவில் கட்டியுள்ளனர். (அடக் கடவுளே !)

ரசிகர் மன்றத் தலைவர் தங்கவேல், செயலாளர் ராஜசேகரன் உள்ளிட்டோர் இணைந்து விஜய்காந்துக்குசிலையையும் வடிவமைத்து அதை கோவிலில் (!!) நிறுவியுள்ளனர்.

இதற்காக இந்தக் கும்பல் ஆக்கிரமித்துள்ள இடம் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமானது.

இதையடுத்து சிலையையும் கோவில் என்ற பெயரில் எழுப்பப்பட்டுள்ள கட்டடத்தையும் அகற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என தாராபுரம் வருவாய் அலுவலர் வேலுச்சாமி கூறியுள்ளார்.

இதை அகற்ற தாசில்தாருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந் நிலையில், சிலையை அகற்றுவது குறித்து ரசிகர் மன்ற நிர்வாகிகளிடம் பேச விஜயகாந்த் ரசிகர் மன்றத்தலைவர் ரா. வசந்தன் தாராபுரம் விரைந்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+