மத்திய பிரதேச மாநிலங்களவை உறுப்பினராகிறார் திருநாவுக்கரசர்டெல்லி:மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார். புதுக்கோட்டை பகுதியில் செல்வாக்கு மிக்கவர் திருநாவுக்கரசர். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டது. இதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் வெங்கைய நாயுடு ஏற்கெனவே அறிவித்திருந்தார். தமிழகத்தில் மாநிலளங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சட்டசபையில் பாஜகவுக்கு பலம் இல்லை. அதனால் மத்தியப் பிரதேசத்தில் திருநாவுக்கரசரை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நான்கு உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும் ஒருவர்.
டெல்லி:
மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசர் தேர்ந்தெடுக்கப்படவிருக்கிறார்.
புதுக்கோட்டை பகுதியில் செல்வாக்கு மிக்கவர் திருநாவுக்கரசர். ஆனால் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த அதிமுக, புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டது.
இதனால் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காத திருநாவுக்கரசருக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படும் என்று பாஜக தலைவர் வெங்கைய நாயுடு ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
தமிழகத்தில் மாநிலளங்களவை உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கும் அளவுக்கு சட்டசபையில் பாஜகவுக்கு பலம் இல்லை. அதனால் மத்தியப் பிரதேசத்தில் திருநாவுக்கரசரை மாநிலங்களவை வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது. அந்த மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படவிருக்கும் நான்கு உறுப்பினர்களில் திருநாவுக்கரசரும் ஒருவர்.