காவிரி உரிமையை வலியுறுத்தி எம்.எஸ்.உதயமூர்த்தி, சேரன், நாசர் நடைபயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரியில் தமிழகத்தின் உரிமையை வலியுறுத்தி 300 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ள மக்கள் சக்தி இயக்கத்தின் தலைவர் எம்.எஸ். உதயமூர்த்தியின் தலைமையில் நடிகர் நாசர், இயக்குனர் சேரன் உள்ளிட்ட திரைப்படக் கலைஞர்களும் சமூக நல ஆர்வலர்களும் நடை பயணம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளனர்.
வரும் 12ம் தேதி முதல் 22 ம் தேதி வரை இந்த நடைபயணம் நடக்கிறது. காவிரி கடலில் கலக்கும் பூம்புகாரில் இருந்து மேட்டூர் அணை வரையிலான 300 கி.மீ. தூரம் இந்தப் பயணம் நடைபெறவுள்ளது.
இதில் நடிகர் ரஞ்சி, இயக்குனர் லிங்குசாமி, பாடலாசிரியர்கள் சினேகன், நா.முத்துக்குமார் ஆகியோரும் பங்கேற்க உள்ளனர். இயக்குனர் ஷரத்சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications