போயஸ்கார்டன்...கெளடா.. திமுக...

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

பெங்களூரில் கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்த திமுக தலைமையிலான அனைத்துக் கட்சிக் குழு, மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர் தேவே கெளடா, முன்னாள் முதல்வர் எஸ்.எம். கிருஷ்ணாவையும் சந்தித்து காவிரியில் நீர் விட உதவுமாறு கோரிக்கை விடுத்தது.

தவே கெளடாவின் ஆதரவுசன் தான் கர்நாடகத்தில் கூட்டணி ஆட்சியை காங்கிரஸ் அமைத்துள்ளது. இதனால் கர்நாடக அரசு எடுக்கும் முக்கிய முடிவுகளில் தேவே கெளடாவின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.

நேற்று தரம்சிங்கை திமுக தலைமை நிலையச் செயலாளர் துரைமுருகன் தலைமையிலான குழு சந்தித்தபோது, துணை முதல்வரான சித்தராமையாவும் உடனிருந்தார். இவர் கெளடாவின் கட்சியைச் சேர்ந்தவர்.

சமீபத்தில் கெளடாவின் மகன் சென்னைக்கு வந்ததாகவும், அவரை போயஸ் கார்டனுக்கு நெருக்கமான பெரியகுளம் முன்னாள் பிரமுகர் சந்தித்துப் பேசியதாகவும் கூறப்படுகிறது.

காவிரி விவகாரத்தில் திமுகவின் நெருக்குதல்களுக்குப் பணிய வேண்டாம் என்று போயஸ் கார்டன், கெளடாவின் மகனிடம் சொல்லி- கவனித்தும் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இந்த விவரம் திமுகவுக்கும் தெரியவந்ததையடுத்தே கெளடாவையும் சந்திக்கச் சொல்லி துரைமுருகனுக்கு அக் கட்சியின் தலைவர் கருணாநிதி உத்தரவிட்டதாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அப்படியே மரியாதை நிமித்தமாக கிருஷ்ணாவையும் சந்தித்து நீர் கிடைக்கச் செய்ய உதவுமாறு கூறிவிட்டுத் திரும்பியுள்ளது திமுக தலைமையிலான எதிர்க் கட்சிக் குழு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+