ஆதரவற்றோர் விடுதியில் சிறுமிக்கு முத்தம் கொடுத்தவர் கைது
சென்னை:
ஆதரவற்றோர் விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுமியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை பெரம்பூரில் ஆதரவற்ற சிறுவர், சிறுமியருக்கான விடுதி உள்ளது. இந்த விடுதியில், பலர் தங்கிப் படித்து வருகின்றனர். கடலூரைச் சேர்ந்த புவனேஸ்வரி என்ற 12 வயது சிறுமியும் இங்கு தங்கியுள்ளார்.
இவர் விடுதி அறையில் தனியாகப் படுத்துத் தூங்கியபோது அங்கு வந்த மோசஸ் என்ற வாலிபர் புவனேஸ்வரியை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்துள்ளார். அதிர்ந்து போன புவனேஸ்வரி விடுதியிலிருந்து வெளியேறி கோயம்பேடு பஸ் நிலையம் வந்துள்ளார்.
அங்கு அவர் தனியாக நிற்பதைப் பார்த்த சிறுவர் உதவிக் கரம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் புவனேஸ்வரியை அணுகி விசாரித்தனர். நடந்ததைக் கூறினார் புவனேஸ்வரி. இதைத் தொடர்ந்து செம்பியம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. போலீஸார் மோசஸை கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications