மதுரை உயர்நீதிமன்ற கிளை: சட்ட இணையமைச்சர் கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மதுரையில் அமைக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றக் கிளையை விரைவாகத் திறக்க தேவையான நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருவதாக மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் வேங்கடபதி கூறியுள்ளார்.
டெல்லியிலிருந்து திரும்பிய வேங்கடபதி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், மதுரையில் அமைக்கப்பட்டுள்ள உயர் நீதிமன்றக் கிளையைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை. அதனால்தான் இந்த அளவுக்கு தாமதம் ஏற்பட்டு விட்டது.
தற்போது அனைத்து நடவடிக்கைகளையும் சட்ட அமைச்சகம் விரைவுபடுத்தியுள்ளது. எவ்வளவு விரைவாகவே செய்ய முடியுமோ அந்த அளவுக்கு விரைவுபடுத்தியுள்ளோம். குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை திறப்பு நடைபெறும் என்றார் வேங்கடபதி.












Click it and Unblock the Notifications