மேலும் 9 கோவில்களில் அன்னதானம்: ஜெ. அறிவிப்பு
சென்னை:
தமிழக அரசின் அன்னதானத் திட்டம் மேலும் 9 கோவில்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. (9 முதல்வர்ஜெயலலிதாவின் ராசியான எண் என்பது குறிப்பிடத்தக்கது)
63 கோவில்களில் ஆரம்பித்து, இப்போது தமிழக அறநிலையத்துறையின் சார்பில் 162கோவில்களில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
இந் நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை வில்லிவாக்கம் அகஸ்தீஸ்வரர் கோவில், திருத்தணி வடாரண்யேஸ்வர் சுவாமி கோவில்,காட்பாடி திருவலம் வநாதீஸ்வரர் கோவில், தாராபுரம் ஹனுமந்தராய கோவில், மணச்சநல்லூர்ஞீலிவனேஸ்வரர் கோவில்,
திருமயம் கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில், நன்னிலம் செளரிராஜப் பெருமாள் கோவில்,அருப்புக்கோட்டை சொக்கநாதர் கோவில், திருநெல்வேலி ராதாபுரம் உவரி சுயம்புலிங்கம் ஆலயம்ஆகிய 9 கோவில்களில் அன்னதானம் வழங்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வரும் 14ம் தேதி முதல் இக் கோவில்களில் அன்னதானத் திட்டம் அமலுக்கு வரும்.
இதனால் அன்னதானத் திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள கோவில்களின் எண்ணிக்கை 171ஆக உயர்ந்துள்ளது. (இதன் கூட்டுத் தொகையும் 9 தான் !).












Click it and Unblock the Notifications