மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா எம்பியாகும் திருநாவுக்கரசர்சென்னை:முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.ராஜ்யசபாவுக்கு வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இந் நிலையில் பாஜக தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.இதில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் நிர்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அத்தோடு பிரசாரத்திற்கும் அவர் அழைக்கப்படவில்லை.இதனால் அதிருப்தியடைந்த அவரை சமாதானப்படுத்திய கட்சி மேலிடம் மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுப்பதாக உறுதியளித்திருந்தது. அதன்படி தற்போது திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ள மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து திருநாவுக்கரசர் தேர்வாகவுள்ளார்.
சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்குத் தேர்வு செய்ய பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது.
ராஜ்யசபாவுக்கு வரும் 28ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நேற்று தொடங்கியது. இந் நிலையில் பாஜக தனது முதல் பட்டியலை வெளியிட்டுள்ளது.
இதில் முன்னாள் மத்திய அமைச்சர் திருநாவுக்கரசரை மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க. நிறுத்தியுள்ளது.
மக்களவைத் தேர்தலில் ஜெயலலிதாவின் நிர்பந்தம் காரணமாக புதுக்கோட்டை தொகுதி மட்டுமல்லாது தமிழகத்தின் எந்தத் தொகுதியிலும் திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. அத்தோடு பிரசாரத்திற்கும் அவர் அழைக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த அவரை சமாதானப்படுத்திய கட்சி மேலிடம் மாநிலங்களவை எம்.பி. சீட் கொடுப்பதாக உறுதியளித்திருந்தது. அதன்படி தற்போது திருநாவுக்கரசருக்கு சீட் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவுக்கு எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால், பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் உள்ள மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து திருநாவுக்கரசர் தேர்வாகவுள்ளார்.












Click it and Unblock the Notifications