லஞ்சம்: தனி தாசில்தார், அரசு உதவி இயக்குனர் கைது
திருச்சி:
லஞ்சம் வாங்கிய இரு திருச்சி அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களது வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புப் போலீசார் பல லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.
மணல் காண்ட்ராக்ட்களை அரசு ரத்து செய்ததால், மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்த காண்ட்ராக்டர் வீரமணி என்பவருக்கு அரசு ரூ. 3.30 லட்சத்தைத் திருப்பித் தர வேண்டியிருந்தது.
இந்தப் பணத்தைத் திருப்பித் தருவதற்கு, கனிம வளத்துறை உதவி இயக்குனர் கலைவாணன், தனி தாசில்தார் குமரேசன் ஆகியோர் வீரமணியிடம் ரூ. 15,000 லஞ்சம் கேட்டுள்ளனர்.
இது குறித்து வீரமணி திருச்சி லஞ்ச ஒழிப்புப் போலீசாரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து கனிம வளத்துறை அலுவலகம் வந்த போலீசார் கலைவாணனையும் குமரேசனையும் கைது செய்தனர்.
அவர்களது வீடுகளிலும் சோதனை நடத்தினர். கலைவாணனின் வீட்டில் கணக்கில் காட்டப்படாத ரூ. 1.25 லட்சம் சிக்கியது. தாசில்தாரின் வீட்டில் ரூ. 35,000 சிக்கியது.












Click it and Unblock the Notifications