தூத்துக்குடி நகராட்சியில் அதிமுக-திமுக கவுன்சிலர்கள் அடிதடி: 5 பேர் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடி நகராட்சியில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் இடையே அடிதடி, சண்டை நடந்தது.
நாற்காலிகள், பேப்பர் வெயிட்டுகளால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டதில் அதிமுக கவுன்சிலரின் மண்டை உடைந்தது. இச் சம்பவம் தொடர்பாக 5 கவுன்சிலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நகராட்சியின் அவைக் கூட்டம் தொடங்கியவுடனேயே வாக்குவாதம் வெடித்தது. தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தனர்.
இது வாக்குவாதமாக மாறியது. சிறிது நேரத்தில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். நாற்காலிகளை தூக்கி வீசியதோடு, பேப்பர் வெயிட்டுகளையும் எறிந்தனர்.
இதில் அதிமுக கவுன்சிலரான ஜெயக்குமார் என்பருக்கு மண்டை உடைந்த ரத்தம் கொட்டியது. உடனடியாக அவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
சம்பவம் குறித்து நகராட்சித் தலைவர் டேனியேல் ராஜ் போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து இரு தரப்பையும் சேர்ந்த 5 கவுன்சிலர்களை போலீசார் கைது செய்தனர். இந்த 5 பேரும் அவையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications