மதுரை உயர் நீதிமன்ற கிளைக்கு 6 நீதிபதிகள்: வேங்கடபதி
Subscribe to Oneindia Tamil
கடலூர்:
மதுரை உயர்நீதிமன்றக் கிளைக்கு ஆரம்பத்தில் 6 நீதிபதிகள் நியமிக்கப்படுவர் என மத்திய சட்டத்துறை இணை அணைச்சர் வேங்கடபதி தெரிவித்துள்ளார்.
கடலூ-ரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மதுரையில் உயர்நீதிமன்றக் கிளையை -நிறுவும் பணிக்கு -முக்கியத்துவம் கொடுக்கப்படும். -முறைப்படியான -நடவடிக்கைகளை மேற்கொண்டு குடியரசுத் தலைவ-ரின் அனுமதி பெற்று உயர்நீதிமன்றக் கிளை திறக்கப்படும்.
ஆரம்பத்தில் மதுரை கிளைக்கு 5 அல்லது 6 நீதிபதிகள் நியமிக்கப்படுவர். பின்னர் நீதிபதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
திருவாரூர், நாகை, தஞ்சை ஆகிய மாவட்டங்கள் சென்னை உயர்நீதிமன்ற எல்லைக்குள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற கோ-ரிக்கை பரிசீலிக்கப்படும் என்றார் வேங்கடபதி.












Click it and Unblock the Notifications