மின்கோபுர தாக்குதல் வழக்கு: இளவரசன் நீதி-ம-ன்-றத்-தில் ஆஜர்
விழுப்புரம்:
நெய்வேலி மின்கோபுரத்தை வெடிகுண்டு வைத்து தாக்கிய வழக்கில் உளுந்தூர்ப்பேட்டை நீதிமன்றத்தில் தமிழர் விடுதலைப் படை தலைவர் சுப. இளவரசன் ஆஜர்படுத்தப்பட்டார்.
வீரப்பனுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள சுப. இளவரசன் தற்போது போலீஸ் பிடியில் உள்ளார். பல்வேறு வழக்குகளில் தொடர்புள்ள அவரை ஒவ்வொரு நீதிமன்றமாக போலீஸார் ஆஜர்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்ப்பேட்டை நீதிமன்றத்தில் சுப. இளவரசன் ஆஜர்படுத்தப்பட்டார். காவி-ரிப் பிரச்சினையின்போது -நய்வேலி மின்கோபுரத்தை குண்டு வைத்தது தகர்த்த வழக்கில் -முக்கியக் குற்றவாளியாக சுப. இளவரசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
உளுந்தூர்ப்பேட்டை 2வது குற்றவியல் நீதிபதி காந்தி -முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சுப. இளவரசனை ஜூன் 15ம் தேதி மீண்டும் ஆஜர்படுத்துமாறும், அப்போது குற்றப்பத்தி-ரிக்கை -நகல் வழங்கப்படும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.