தமிழகத்தில் தென் மேற்குப் பருவமழை தீவிரம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலம் முழுவதுமே பரவலாக மழை பெய்யும் என நுங்கம்பாக்கம் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இந்த வருடம் பருவமழை மே மாதத் துவக்கத்திலேயே ஆரம்பித்துவிட்டது. சீரான மழை பொழிவு இல்லாவிட்டாலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வழக்கமான மே மாத வெப்பத்தில் இருந்து மக்கள் தப்பிவிட்டனர்.
இந் நிலையில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகத்தில் ஏரிகள், குளங்களும் நிரம்பி வருகின்றன. குறிப்பாக சென்னை நகருக்கு குடிநீர் வழங்கும் புழல், பூண்டி, செம்பரம்பாக்கம், சோழாவரம் ஏரிகள் வேகமாய் நிரம்புகின்றன.
சிதம்பரம் அருகேவுள்ள வீராணம் ஏரியின் நீர் மட்டம் விடுவிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் சென்னைக்கு இந்தத் தண்ணீரும் தடங்கலின்றி கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications