இந்திய அணு ஆயுத ரகசியங்களை விற்ற தொழிலதிபர்: துபாய் போலீஸ் உதவியுடன் கைதுமும்பை:இந்திய அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்ற இந்தியர் ஒருவர் துபாய் போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.அக்தர் ஹூசைன் குத்புதீன் அகமத் (35) என்ற துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்றதை அந் நாட்டுப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.இந் நிலையில் சில அரபு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் இந்திய அணு ஆராய்ச்சி, ஆயுத உற்பத்தி குறித்த அதி ரகசியமான விஷயங்களை இவர் விற்றதாகத் தெரிகிறது.அப்போது அவரை கையும் களவுமாகப் பிடித்த துபாய் போலீசார் உடனே அவரை மும்பை விமானத்தில் ஏற்றிவிட்டதோடு, மும்பை போலீசாருக்கும் தகவல் தந்தனர்.இதையடுத்து மத்திய உளவுப் பிரிவினரை மும்பை போலீசார் அலர்ட் செய்தனர்.இந் நிலையில் துபாயில் இருந்து மும்பை சாகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அகமதை போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்த மத்திய உளவுப் பிரிவினர் அடையாளம் தெரியாத இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அகமதின் அண்ணன் இந்தியாவில் அணு விஞ்ஞானியாக இருப்பதாகத் தெரிகிறது.கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாகவே அகமதை துபாய் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். துபாயில் இவர் விற்ற ஆவணங்களை அந் நாட்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவையும் மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Subscribe to Oneindia Tamil

மும்பை:

இந்திய அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்ற இந்தியர் ஒருவர் துபாய் போலீசாரின் உதவியுடன் கைது செய்யப்பட்டார்.

அக்தர் ஹூசைன் குத்புதீன் அகமத் (35) என்ற துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் அணு ஆயுத ரகசியங்களை விற்க முயன்றதை அந் நாட்டுப் போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை ரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.

இந் நிலையில் சில அரபு நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் இந்திய அணு ஆராய்ச்சி, ஆயுத உற்பத்தி குறித்த அதி ரகசியமான விஷயங்களை இவர் விற்றதாகத் தெரிகிறது.

அப்போது அவரை கையும் களவுமாகப் பிடித்த துபாய் போலீசார் உடனே அவரை மும்பை விமானத்தில் ஏற்றிவிட்டதோடு, மும்பை போலீசாருக்கும் தகவல் தந்தனர்.

இதையடுத்து மத்திய உளவுப் பிரிவினரை மும்பை போலீசார் அலர்ட் செய்தனர்.

இந் நிலையில் துபாயில் இருந்து மும்பை சாகர் விமான நிலையத்தில் வந்திறங்கிய அகமதை போலீசார் கைது செய்தனர். உடனடியாக அவரை தங்கள் கஸ்டடியில் எடுத்த மத்திய உளவுப் பிரிவினர் அடையாளம் தெரியாத இடத்துக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. அகமதின் அண்ணன் இந்தியாவில் அணு விஞ்ஞானியாக இருப்பதாகத் தெரிகிறது.

கிட்டத்தட்ட இரண்டாண்டு காலமாகவே அகமதை துபாய் போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். துபாயில் இவர் விற்ற ஆவணங்களை அந் நாட்டு போலீசார் கைப்பற்றியுள்ளனர். அவையும் மும்பை போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+