சென்னையில் லாரிகள் மூலம் வீராணம் நீர் வினியோகம்
சென்னை:
சென்னை நகரில் வீராணம் குடிநீர் விநியோகம் தொடங்கியது.
கடலூர் மாவட்டம் வீராணம் ஏரியிலிருந்து குடிநீர் எடுத்து வந்து சென்னை நகரில் விநியோகிக்கும் வகையில் ரூ. 750 கோடி செலவில் புது வீராணம் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் தண்ணீர் போதுமானதாக இல்லாததால், தற்போது கடலூர் மாவட்டம் வடக்குத்தி கிராமத்தில் போர்வெல் மூலமாக தண்ணீர் எடுக்கப்பட்டு, நெய்வேலி கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ராட்சத குழாய்கள் மூலம் சென்னை போரூர் ஏரியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
போரூரிலிருந்து பின்னர் தண்ணீர் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு சுத்திகரிக்கப்படுகிறது. அதன்படி கடந்த சில நாட்களாக சென்னைக்கு வந்த வீராணம் குடிநீர் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்தகரிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து சுத்தகரிக்கப்பட்ட வீராணம் குடிநீர் லாரிகள் மூலம் சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டது. நேற்று 13.7 மில்லியன் லிட்டர் வீராணம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டதாக மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தெரிவித்தனர். இது படிப்படியாக 60 மில்லியன் லிட்டராக அதிகரிக்கப்படும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications