இந்தியா: ஐரோப்பிய விமான டிக்கெட் ஏஜென்டுகள் ஸ்டிரைக்கொல்கத்தா:பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம். ஆகிய ஐரோப்பியவிமான நிறுவனங்களுக்கான டிக்கெட் பதிவு செய்யும் பணிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகஇந்திய டிராவல் ஏஜென்டுகள் சங்கம் எச்சரித்துள்ளது.இதனால் இந்த விமானங்களில் பயணிக்க டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பிரச்சனை உருவாகவுள்ளது.ஏஜெண்டுகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தாரகேஸ்வர் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்திய ஏஜெண்டுகளின் கமிஷனை இந்த விமான நிறுவனங்கள்ஒருதலைப் பட்சமாகக் குறைத்துவிட்டன. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கூடுதலாககமிஷன் தந்து வருகின்றன.இதனால் ஐரோப்பிய விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகளை பதிவு செய்வதையும், விற்பதையும் வரும் 26ம்தேதி முதல் நிறுத்தப் போகிறோம் என்றார்.இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம்.ஆகிய விமானங்களின் டிக்கெட்டுகளை இந்தியாவில் பதிவு செய்வதில் பிரச்சனை வரலாம்.இதற்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கொல்கத்தா:
பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம். ஆகிய ஐரோப்பியவிமான நிறுவனங்களுக்கான டிக்கெட் பதிவு செய்யும் பணிகளை நிறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாகஇந்திய டிராவல் ஏஜென்டுகள் சங்கம் எச்சரித்துள்ளது.
இதனால் இந்த விமானங்களில் பயணிக்க டிக்கெட்டுகள் பதிவு செய்வதில் பிரச்சனை உருவாகவுள்ளது.
ஏஜெண்டுகள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர் தாரகேஸ்வர் சிங் நிருபர்களிடம் பேசுகையில்,
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்திய ஏஜெண்டுகளின் கமிஷனை இந்த விமான நிறுவனங்கள்ஒருதலைப் பட்சமாகக் குறைத்துவிட்டன. அதே நேரத்தில் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் மட்டும் கூடுதலாககமிஷன் தந்து வருகின்றன.
இதனால் ஐரோப்பிய விமான நிறுவனங்களின் டிக்கெட்டுகளை பதிவு செய்வதையும், விற்பதையும் வரும் 26ம்தேதி முதல் நிறுத்தப் போகிறோம் என்றார்.
இதன் காரணமாக பிரிட்டிஷ் ஏர்வேஸ், சுவிஸ் ஏர், ஏர் பிரான்ஸ், லுப்தான்ஸா, அல் இத்தாலியா, கே.எல்.எம்.ஆகிய விமானங்களின் டிக்கெட்டுகளை இந்தியாவில் பதிவு செய்வதில் பிரச்சனை வரலாம்.
இதற்கிடையே பிரச்சனையை பேசித் தீர்க்க வரும் 22ம் தேதி பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications